இளைஞர்களின் சீர்கேடு 

நம் சமூதாயத்தில் புதியவித கட்டுப்பாடற்ற ஒரு சமூக தீமையைக் காண்கிறோம் (social evil). இந்த புதுவித சமூக தீமையை கட்டுப்படுத்த மற்றும் அதை அகற்ற போதிய நடவடிக்கையும், விழிப்புணர்வும் நம்மில் காணப்படவில்லை.

இச்சமூக தீமை இளைஞர்கள் மத்தியில் சமூக நலன்போல் TV, CINEMA மூலம் போதிக்கப்படுகிறது. இச்சமூக தீமையினால் இளைஞர்கள் வாழ்வில் முன்னேற்ற மின்றி சோர்ந்து போகிறார்கள். இச்சமூக தீமை இன்று பொது  இடங்களில் அதிகமாகக் காணப்படுகிறது. 

பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்தியில் காணப்படும் காமவிகார எண்ணங்களின் செயல்பாடே இந்த புதியவித சமூக தீமை  – இதை குறித்து தான் நான் எழுதுகிறேன்.

இன்று பள்ளி கல்லூரி மாணவ மாணவியர் நட்பு என்ற பெயரில் தங்கள் இச்சையான எண்ணங்களையும், காமவிகார ஆசைகளையும் பரிமாறி கொண்டு வருகிறார்கள், வெட்கமின்றி அதை பொது இடங்களில் அவ்வகையான எண்ணங்களை வெளிப்படுத்துகிறார்கள். தாங்கள் என்ன செய்கிறர்கள் என்பதை மறந்து, நட்பு என்ற போர்வையில் விபச்சார செயலில் ஈடுபடுகிறார்கள்.

தொலைக்காட்சி, சினிமா, தரமற்ற நண்பர்கள்,முறைப்படுத்தப்படாத இணையதளம் கற்றுத் தரும் சித்தாந்தங்கள் ஆகியவை சிறுவர் இதயங்களில் விபச்சார எண்ணங்களின் விதையாக விழுந்து, வேகமாக வளர்ந்து, செயலாக மாறுகிறது. இச்செயல்களைத்தான் இன்று நம் பள்ளி கல்லூரி மாணவ மாணவியர் பொது இடங்களில் வெளிப்படுத்துகிறார்கள், இச்செயல்கள் இளைஞர்களின் சீர்கேடுகளுக்கு அடையாளம்.

இச்செயல்கள் ஆவன 

  1. இணையதளம் மூலமாக மாறுபாடான காரியங்களைப் பார்ப்பது, நண்பர்களுடன் காமவிகார கோட்பாடுகளை விவாதிப்பது.
  2. ஓரினச்சேர்க்கை, விபரச்சாரம், வேசித்தனம் இவற்றை நன்மைகளைப்போல் பாவித்துப் பேசுவது.
  3. சினிமா, தொலைக்காட்சி, வலைஒளி நிகழ்ச்சிகளில் அதிக ஆர்வம் கொள்வது.
  4. சினிமா பாடல்களை கேட்பது, மற்றும் அப்பாடல் வார்த்தைகளை மீண்டும் மீண்டும் உச்சரிப்பது.
  5. நட்பு என்ற போர்வையில் காமவிகார எண்ணங்களுடன் எதிர் பாலினத்தை அணுகுவது.
  6. முக்கியமற்ற காரியங்களை எதிர் பாலினத்துடன் அதிகநேரம் பேசுவது, சமூகவலைதளம்மூலமாக விவாதிப்பது. 
  7. நீண்ட நேரம் எதிர் பாலினத்தோடு park, beach போன்ற பொது இடங்களில் செலவிடுவது.
  8. உறவுகள், நெருங்கிய நண்பர்கள் அல்லாதவர்களுடன் கொண்டாட்டங்களில் ஈடுபடுவது.
  9. பள்ளி, கல்லூரிகளுக்கு ஜோடியாக செல்வது.
  10. பள்ளி மற்றும் கல்லுரி மாணவ, மாணவியரின் காம உணர்வுகளை தூண்டும்வகையில் பேசுவது.

இறுதியாக இச்செயல்களில் ஈடுபடும் மாணவ மாணவியர் தங்களை காதல் ஜோடியாக பாவித்து பாலியல் செயல்பாடு, வேசித்தனம், விபச்சாரம், ஓரினச்சேர்க்கை, சட்டவிரோத உறவு ஆகிய சீர்கேடடைகிறார்கள். இந்த சமூக தீமை ( social evil ) புற்று நோய்போல் நம் இளைஞர்கள் மத்தியில் பரவி வருகிறது. 

இச்சமூக தீமையால் உருவாகும் சாபங்கள் 

  1. ஓரினச்சேர்க்கை
  2. பலருடன் பாலியல் உறவுகள்
  3. உறவுகளில் முறிவு.
  4. பாலியல் நோய்கள்.
  5. ஆண் மலட்டுத்தன்மை
  6. பெண் கருவுறாமை
  7. குடும்பங்களில் சண்டை, மன்னியாமை, சமாதான குறைவு, உடைக்கப்பட்ட குடும்பம்
  8. ஞானம் மற்றும் அறிவு இழப்பு
  9. திறன் இழப்பு
  10. நேர இழப்பு
  11. வாழ்க்கையில் முன்னேற்றம் இல்லாமை
  12. மோசமான சிந்தனைத்திறன் 
  13. விவாகரத்து
  14. கடன் மற்றும் நிதிச்சுமை
  15. மாறுபாடான காம எண்ணங்கள் 
  16. தொடர் கருக்கலைப்பு 
  17. கருப்பை பிரச்சனை

இச்சமூக தீமையை ( social evil ) ஓழிக்க நாம் செய்யவேண்டிய  செயல்கள்.

  1. இளைஞர்கள் முக்கியமாக பள்ளி மாணவ மாணவியர் பொது இடங்களில் தேவையின்றி நேரம் செலவிடுதலை எதிர்த்து குரல் கொடுக்கவேண்டும் 
  2. இவ்வாறான மாணர்களை பள்ளி, கல்லூரி நிர்வாகம் ஒழுங்கு நெறிப்படுத்த வேண்டும்.
  3. இளைஞர்களின் சீர்கேடானப்போக்குக்கு எதிரான சட்டங்கள் மற்றும் மசோதாக்களை அரசு இயற்றவேண்டும்.
  4. பொது இடங்களில் ஜோடி சேரும் இளைஞர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்.
  5. குடும்பங்களில் சினிமா, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பார்ப்பதை முழுவதுமாக தவிர்க்க வேண்டும்.
  6. பள்ளி மாணவர்களுக்கு செல்போன் தரக் கூடாது.
  7. இளைஞர் சீர்கேட்டை தடுக்கும் வகையில் பாடத்திட்டங்களை அரசு உருவாக்க வேண்டும். 
  8. மாறுபாடான காம எண்ணங்களிலிருந்து பாதிக்கப்பட்ட மாணவ, மணவியருக்கு உதவும் வகையில்  சீர்திருத்த மையங்கள் அமைக்கவேண்டும்.
  9. சினிமா தியேட்டர் ஹோட்டல், உணவகம் போன்ற இடங்களில் சட்டபூர்வமாக இணைக்கப்படாத ஜோடிகளுக்கு நுழைவு அனுமதி தரக்கூடாது. 
  10. இளைஞர்கள் மத்தியில் ஓரினச்சேர்க்கை கோட்பாடு மற்றும் காமவிகார கோட்பாடு உட்புகுத்தும் நிகழ்சிகள், நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளை தடை செய்ய வேண்டும்.

இன்று நாம் இந்த சமூகதீமையை எதிர்த்து செயல்படவில்லை என்றால் பாரதத்திற்கு நல்ல எதிர்காலமே இல்லாமல் போய்விடும். சிந்திப்போம் செயல்படுவோம்.

சமூக நலன் கருதி , Dr பெனிடிக்ட் அருள்தாஸ்

3 Replies to “இளைஞர்களின் சீர்கேடு ”

  1. Thank you for exposing this Dr. Benedict. You have rightly identified this sickness of the present society. Thank you for suggesting solution also. AOJ can take some action plans for this.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *